• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். குப்பிளானில் இளைஞனொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

Nov 18, 2023

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் கிழக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று வெள்ளிக்கிழமை (17) மதியம் உயிரிழந்துள்ளார்.

31 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அவர் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed