• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சென்னை சென்ற விமானத்தில் உயிரிழந்த யாழ் பக்தர்

Jan 11, 2024

கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென உடல் நலக்குறைவு காரணமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது ஐயப்ப பக்த நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்ல கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்ற போதே இத்துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையை சேர்ந்த அய்யப்ப பக்தரான மோகனதாஸ் (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது குறித்த நபருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் விமானத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் அவரது உடல்நிலை மோசமானதால் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசர கால மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விமானம் சென்னையில் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த விமான நிலைய பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த்துள்ளனர்.

நண்பர்களுடன் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல வந்த மோகனதாஸ் இறந்ததால் அவரது உடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்ல இலங்கை தூதரக அதிகாரிகள் மூலம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed