• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை.

Jan 13, 2024

கனேடிய மக்களுக்கு பனிப்புயல் தொடர்பில் சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம்(13) ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் ஒரு சில இடங்களில் பனிப்புயல் நிலைமை அதிகரிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

அதன்போது, சில இடங்களில் 25 சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன சாரதிகளினால் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடுமென கூறப்படுகிறது.

கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: அதிகரிக்கும் பனிப்புயல் | Canada Blizzard Weather Alert Peoples

அத்தோடு, பனிப்புயல் வீசும் வேளைகளில் பயணங்களை வரையறுத்துக் கொள்வது அவசியமென மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கடுமையான குளிருடன் மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed