• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோர விபத்தில் சிக்கிய இளைஞன்! யாழில் உயிரிழப்பு

Feb 1, 2024

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த பொ.அபிசாகன் (வயது 20) என்ற இளைஞரே  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த இளைஞன் கடந்த 26ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த இளைஞர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

சிகிச்சை பலனின்றி 

இந்நிலையில் அவர் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(31) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed