• Mo. Mai 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆசிரியையின் கைகளை கட்டிவைத்து கொள்ளை.

Mai 9, 2024

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபரொருவர் ஆசிரியையின் கைகளை கட்டி வைத்துவிட்டு வீட்டிலிருந்த 11 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

திருச்செந்தூரில் அதிர்ச்சி! 100 அடி உள்வாங்கிய கடல்!

சந்தேக நபர் ஆசிரியையின் வீட்டின் குளியலறையின் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்துள்ள நிலையில் ஆசிரியையின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் சந்தேக நபர், ஆசிரியையின் கைகளைக் கட்டி வைத்துவிட்டு வீட்டிலிருந்த பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  1. அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான செய்தி!
  2. புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் மரணம்

வீட்டிலிருந்த 35,000 ரூபாய் பணம் ,6 பவுண் தங்க மாலை,பெண்டன்,வளையல்கள்,2 மோதிரங்கள் மற்றும் காதணிகள் ஆகியவையும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed