• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை.

Feb 9, 2022

லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

லண்டன் சிறைச்சாலையில் இலங்கைத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரான கேதீஸ்வரன் குணரத்தினம் வார்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறையில் பிப்ரவரி 23, 2018 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

மரண விசாரணை அறிக்கையின்படி, அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சாப்பிட மறுத்ததால் பட்டினி கிடந்தார். இவ்வாறான மனநிலையில் இருந்த குணரத்தினத்தை சிறை ஊழியர்கள் தினந்தோறும் பரிசோதிக்க தவறியதாக கூறப்படுகிறது.

இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளான கேதீஸ்வரன் பிரித்தானியாவுக்கு வந்தார். அகதியாக வந்த அவர், கடந்த செப்டம்பர் 6, 2017 அன்று கைது செய்யப்பட்டு வார்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் சரியாக பதிலளிக்கப்படவில்லை. கைதியின் கோரிக்கைக்கு தீர்வு காணப்படவில்லை. பிரிட்டிஷ் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் இந்த மரணம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. நீதியமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்கள் எண்ணங்கள் கேதீஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. மரண விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்து உரிய நேரத்தில் பதிலளிப்பதாக அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.  

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed