• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தம்

Nov 8, 2022

கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள அதன் பிரதான அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான அதன் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மறு அறிவித்தல் வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed