அமெரிக்கா – புளோரிடா மாநிலத்தின் கிளியர்வாட்டர் பகுதியில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக விமானம் ஒன்று மொபைல் குடியிருப்பில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
விபத்து பற்றி தகவலறிந்த கிளியர்வாட்டர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இவ் விபத்தில், விமானத்திலிருந்த பலர் உயிரிழந்ததாகவும், வீட்டில் இருந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆனால் எத்தனை பேர் இறந்தனர்? என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை.
விமானம் ஒரு வீட்டின் மீது மோதியது என்றும், குறைந்தது மூன்று வீடுகள் தீயில் கருகி சேதமடைந்ததாவும் தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
அந்த விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பாக, அருகில் உள்ள செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்தை விமானி தொடர்பு கொண்டு அவசரநிலையை அறிவித்ததாக அந்த அதிகாரி கூறினார்.
விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.