• Di. Mai 14th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • வவுனியாவில் பாலடைந்த கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

வவுனியாவில் பாலடைந்த கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

வவுனியா – மதுராநகர் பகுதியில் கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கனசுந்தரம் சம்சன்(10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

முகக்கவசம் அவசியமில்லை: சுகாதார அமைச்சர் அறிவிப்பு

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார். எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்…

வவுனியா நகரில் விபத்து -4 பேர் படுகாயம்

வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (17.04) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம்…

சட்டவிரோதமாக மாடுகளை வெட்டிய இருவர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள பற்றைக் காணியில் வைத்து திருட்டு மாடுகள் இரண்டை சட்டத்துக்குப் புறம்பாக இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (17) இந்தக் கைது நடவடிக்கை…

புகையிரதம், மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் உயிரிழப்பு

இன்று பலப்பிட்டிய வெலிவத்தை கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். பலபிட்டிய – வெலிவத்தையில் உள்ள கடவையில் அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் 41…

யாழ்.கோப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.

யாழ்.கோப்பாய் பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கோப்பாய் காவல் துறை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஊரெழு பகுதியில் மறைத்து…

இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம்

இலங்கையில் இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்றைய தினம் A, B, C, P ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் காலை 11.15 மணி வரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கையில் வைப்பிலிட்ட தனிநபர்களின் பணத்தின் எதிர்காலம்?

வெளிநாடுகளில் இருந்து நிரந்தரமாக பணத்தினை அனுப்பிக்கொண்டிருப்பவர்கள் தங்களின் பணத்திற்கு அதிக பெறுமதி கிடைக்க வேண்டும் என்பதினையே எப்பொழுதும் விரும்புவார்கள். அவர் தனியார் நிறுவனங்கள் ஊடாக நிதியை அனுப்புவதினால் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளுக்கு வெளிநாட்டு நாணயங்கள் வராத நிலை காணப்படுகின்றது.…

யாழில் நாய்க் கடிக்கு இலக்கான 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

தெரு நாய் மற்றும் பூனையின் நகங்கள் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதுதான் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகினார் என்று சட்ட மருத்துவ வல்லுநரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது-35)…

யாழ்.குடாநாட்டினுள் புகுந்த யானைகள்

மீண்டும் யாழ்.குடாநாட்டிற்குள் யானைகள் புகுந்தமையினையடுத்து பரபரப்பு தொற்றியுள்ளது.ஆனையிறவைக் கடந்து இயக்கச்சியில் யானைகள் குறைந்தது .மூன்று யானைகள் வந்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனையிறவு – தட்டுவன்கொட்டியினையண்டிய பகுதியில் நின்றதாகத்தகவல்கள் வெளிவந்திருந்தன. பின்னர் கொம்படிக்களப்பின் வழியாக சங்கத்தார் வயல் பகுதியை வந்தடைந்து பின்னராக…

முள்ளியவளை பகுதியில் விபத்து குமுழமுனையினை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

முள்ளியவளை களிக்காட்டுப்பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில் களிக்காடு எனப்படும் பகுதியில் நேற்று இரவு உந்துருளியில் பயணித்த 44 அகவையுடைய 6 ஆம் வட்டாரம் குமுழமுனையினை சேர்ந்த சுப்பிரமணியம் கோபிநாத் என்ற…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed