• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜெர்மனியில் யாழ் இளைஞன் சாதனை.

Feb 27, 2022

ஜெர்மனியில் மிகக்குறைந்த வயதில் இரு துறைகளில் உயர் பட்டங்களை பெற்று யாழ்.தமிழ் இளைஞன் அனங்கன் சின்னையா பெருமை சேர்த்துள்ளார்.

ஜெர்மனியில் இருக்கும் வடமேற்கு மாநிலத்தில் வாழ்ந்துவரும் அனங்கன் சின்னையா என்ற யாழ்.இளைஞன் தனது 29 ஆவது வயதில் மாஸ்ட லோ மற்றும் பட்டய கணக்காளராக (master low and chartered accountant) குறைந்த வயதில் கல்விப் புலத்தில் சாதனை படைத்துள்ளார்.

அனங்கன் சின்னையாவை கௌரவிக்கும் முகமாக கடந்த 22 ஆம் திகதி ஜெர்மனியின் வடமேல் மாநில நிதி அமைச்சு தனது உத்தியோகபூர்வ இலச்சினை பொறிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.

மேலும் இவர் யாழை பூர்வீகமாகக் கொண்ட இலங்கை இந்து பௌத்த கலாச்சார பேரவையின் பொதுச்சயலாளரும் ஜெர்மனியின் இலங்கைக்கான குடிவரவு குடியகல்வு சட்ட ஆலோசனை நிறுவனத்தின் தலைவருமான தேசமானிய எம்.டி இராமச்சந்திரனின் ஒரே ஒரு புதல்வர் ஆவார்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed