• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆரம்பமானது நல்லூர் கைலாசபிள்ளையார் அலங்கார உற்சவம்

Apr 7, 2022

யாழ்ப்பாணம் இராஜதானியின் முதன்மைக் கோயிலாக விளங்கும் பிரசித்தி பெற்ற நல்லூர் ஸ்ரீ கைலாசபிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு விசேட அபிஷேக அலங்கார உற்சவம் இன்று வியாழக்கிழமை(07.4.2022) ஆரம்பமானது.

இன்று காலை-8 மணிக்கு விசேட அபிஷேகம், பூசை, ஆராதனைகளுடன் ஆரம்பமான இவ் ஆலய விசேட அலங்கார உற்சவத்தில் சித்திரைப் புத்தாண்டு தினமான எதிர்வரும்-14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-8 மணிக்கு மகாரத உற்சவ விசேட பூசை வழிபாடுகளும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை-8 மணிக்குத் தீர்த்த உற்சவமும் இடம்பெறும் என மேற்படி ஆலய ஆதீன ஹர்த்தாவும், பரம்பரை நிர்வாகியுமான சிவஸ்ரீ கு.குருசாமிசர்மா தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டிருப்பதால் இந்த வருடமும் மஹோற்சவம் நடைபெறாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed