ஜப்பானில் உள்ள ஹாராவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் நேற்று (1.2.2024) மாலை 4.49 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ஜப்பானின் ஹரா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. அத்துடன் நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.
ரிங்க் ஆப் பயர் எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ள புதிய செயலி!
- அட்சய திரிதியை அன்று ராஜயோகம் உருவாக உள்ள 3 ராசிகள்
- வவுனியாவில் கொள்ளையிட்ட மூவர் கைது !
- தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்:
- யாழில் எரிகாயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு