• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழில் மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்..!

யாழில் மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்..!

பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர் திடீரென நெஞ்சுவலி காரணமாக சுருண்டு விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த ரயிலில் பயணித்த குருநகர் பகுதியைச் சேர்ந்த சேப்பநாயகம் செல்வமலர் (வயது 64)…

கடற்படை சிப்பாய் தற்கொலை

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேகாலையை சேர்ந்த டி.பி.என்.டி. பெரேரா(வயது 23) எனும் கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார். குறித்த சிப்பாய் செவ்வாய்க்கிழமை காலை தனது துப்பாக்கியினால் தன்னைத் தானே…

பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன், மாவனெல்ல, உதுவம்கந்த பாறையிலில் ஏறிய போது, 300 அடி உயரமான பாறையில் இருந்து தவறி வீழ்ந்து பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இளம் உதவி விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், அல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த…

உர வகைகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை

பெரும்போகத்திற்கு தேவையான உரவகைகளை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிக்கையில், எதிர்வரும் பெரும்போகத்திற்குரிய உரவகைகளை விவசாயிகளுக்கு நெல்விதைப்பதற்கான ஆரம்ப வேலைகளை செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னரே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு சகல…

வல்லை பற்றைக்குள் மீட்கப்பட்ட முதியவர் ஒருவரின் சடலம்

வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (20) நண்பகல் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது -75) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். கடந்த மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என…

நீர்வேலி,பூதர்மடம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து

கொழும்பிலிருந்து யாழ்.சென்ற வாகனமொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. நீர்வேலி, பூதர்மடம் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நெல்லியடிக்கு சென்று கொண்டிருந்த காரின் சாரதிக்கு நித்திரை கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி அங்கிருந்த மின்கம்பத்துடன் மோதி…

யாழ். இளைஞனின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, தையிட்டி பகுதியை சேர்ந்த இளைஞரொருவர் துவிச்சக்கர வண்டியினால் தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும், துவிச்சக்கர வண்டியின் பயன்களையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி முன்னோடியாக விளங்கியுள்ளார். குறித்த இளைஞர் கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக யாழ்ப்பாணம் வரையான 401 கிலோமீட்டர் தூரத்தை…

யாழில் கடைக்குள் இருந்த ஆண் ஒருவரின் சடலம்.

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசேட தேவைக்கு உரிய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த…

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக இருந்து வரும் நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு பெரியளவில் மாற்றமின்றி, 1790.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எதிர்வரும் நாட்களில் தங்க விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும், டொலரின் மதிப்பு தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதன்…

முட்டை, கோழி இறைச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகளின் அதிகரிப்பை தொடர்ந்து அவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் ஒன்றிய அமைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கால்நடை உணவுகளின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி…

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை !

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக திங்கட்கிழமை (22) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதிக கிராக்கி காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில்…

டிசம்பர் மாதம் வரை வாராந்தம் ஐந்து நாட்களும்?

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை விடுமுறை இன்றி வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்…

கதிரையிலிருந்த குருக்கள் ஜயா மயங்கி வீழ்ந்து திடீர் மரணம்

யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துள்ளார். உடனடியாக வீட்டார் அவரை…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed